ஆலமரம் ஆற்றோரம்
ஆற்றோரம் காற்றடிக்கும்
ஆலமரம் காற்றடித்தும்
அசையாமல் நின்றிருக்கும்!
நாணலுண்டு ஆற்றோரம்
நான்குபக்கம் காற்றடித்தும்
தான்வளைந்து கொடுப்பதனால்
தாங்குகிற நாணலுண்டு!
தலைநிமிர்ந்த ஆலமரம்
சாய்வதுண்டு புயல்காற்றில்!
தலைகுனிந்த நாணல்எனில்
தலைநிமிரும் புயல்ஓய்ந்தால்!
தனக்குநிகர் இல்லையென்பார்
சருக்கிவிழ நேர்வதுண்டு!
பணிவுடனே நடந்துகொண்டால்
பலமான வெற்றியுண்டு!
Wednesday, May 25, 2011
ஆலமரமும் நாணலும்
Share this
Related Articles :
சிட்டுக் குருவி!சிட்டாம் சிட்டுக் குருவி சின்னச் சிட்டுக் குருவி! எட்டா உயர வானை எட்டிப் பறக்கும் குருவி! சிறிய உருவம் குருவி செய்யும் செயலோ பெரிது! ...
சேவல் கூவுதுசேவல் கூவுது ஏன்? சீக்கிரம் நீ எழத்தான்! கூவும் கோழியைப் போல் கொஞ்சம் கண்விழிப் பாய்! தூக்கும் போக்கிடவே சுறுசுறுப் பாக்கிடவே ஊக்க மு ...
குட்டிக் கைகள் குட்டிக் கால்கள்குட்டிக் கைகள் குட்டிக் கால்கள் கொண்ட குட்டிப் பாப்பா! கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் சுட்டித் தங்கப் பாப்பா! ஒட்டிக் கொண்டு அம் ...
சிறுவன் முருகன் சிறுவ னாக வடிவம் கொண்ட தெய்வ ஞான முருகன்! சிறுவ ருக்குத் துணையி ருக்கும் தெய்வம் பால முருகன்! சுட்ட பழமோ சுட்டி டாத தூய பழமோ எதுவோ க ...
வாழை மரத்தின் பயன்கள் எங்கள் வீட்டுத் தோட்டம் தன்னில் இரண்டு வாழை மரங்கள் தங்கம் போலே மஞ்சள் நிறத்தில் தக தகக்கும் பழங்கள் வாழை மரத்தில் இலைகள் பூக்கள் ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment