Wednesday, May 25, 2011

ஔவைப் பாட்டி

பாட்டி ஔவைப் பாட்டி!
பாட்டு சொன்ன பாட்டி!
பாட்டில் அன்பை ஊட்டிப் 
பாடச் செய்த பாட்டி!

ஆத்தி சூடிப் பாட்டை
ஆக்கித் தந்த பாட்டி!
நேர்த்தி யான பாட்டை 
நிலைக்க வைத்த பாட்டி!

கொன்றை வேந்தன் பாட்டைக் 
கோத்துத் தந்த பாட்டி!
என்றும் பாடும் பாட்டை
எழுதி வைத்த பாட்டி!

0 comments

Post a Comment