Wednesday, May 25, 2011

அம்மா!

அம்மா அம்மா வருவாளே!
அன்பாய் முத்தம் தருவாளே!
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்!

கட்டிப் படித்து அணைத்தாலும் 
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும் 
சொந்தம் நமக்கு அம்மாவே!

0 comments

Post a Comment