Tuesday, May 24, 2011

கிளியே கிளியே

கிளியே கிளியே இங்கேவா
கிண்ணம் நிறையப் பால்தருவேன்
களித்துப் பாலைக் குடித்துடிவாய்
கதைகள் எனக்குச் சொல்லிடுவாய்

காட்டில் நீயும் பிறந்தகதை
கனிவாயப் பேசக்  கற்றகதை 
நாட்டில் வந்து திரிந்தகதை
நன்றாய் எனக்கே உரைத்திடுவாய்

வானில் உயர நீபறக்கும்
வகையை எனக்குக் கூறிடுவாய்
நானும் அதனைக் கேட்டிடுவேன் 
நன்றாய் வானில் பறந்திடுவேன்

0 comments

Post a Comment