Wednesday, August 10, 2011

ஓடி ஆடித் திரிவோம்!


ஓடி ஆடித் திரிவத னாலே
உடலில் சுறுசுறுப்பு அதிகம்!
வாடிப் போயொரு மூலையில் கிடந்தால்
வளர்வது விழியில் உறக்கம்.!

நோய்நொடி இல்லா வாழ்க்கை வேண்டுவோர்
நோக்கம் உழைப்பில் பதியும்!
சாய்த்து படுக்கும் சோம்பல் தவிர்த்தால்
சாதனை ஆயிரம் வளரும்!

இன்று செய்வதை இன்றே செய்வது
என்றும் பெருமை சேர்க்கும்!
இன்று செய்வதும் நன்றே செய்வதும்
எவர்க்கும் நன்மை பயக்கும்!

ஆடு மாடுகள் ஓடி ஓடியே
அதனதன் உணவைக் கொள்ளும்!
பாடு பட்டுநீ பசியைப் போக்கிடும்
பண்பால் அன்பே வெல்லும்!

0 comments

Post a Comment